Advertisement
பேசக்கூடாது
(எஸ்.பி.பாலசுப்பிரமணியம் & பி.சுசிலா)
(அடுத்த வாரிசு)
ஆ:பேசக்கூடாது ..... பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்... ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே
பெ:ஆசை கூடாது மண மாலை தந்து ... ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
ஆசை கூடாது .....
ஆ:பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ
பெ:காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
பாலிலாடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ
ஆ:இலையோடு கனியாட தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசித் தூக்கம் இல்லை எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏனிந்த எல்லை
பெ:ஆசை கூடாது மண மாலை தந்து ... ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
ஆ:பேசக்கூடாது .....
ஆ:காலைப்பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ
பெ:ஊஞ்சலாடும் பருவம் உன்டு உரிமை தரவேண்டும்
நூலிலாடும் இடையும் உன்டு நாளும் வரவேண்டும்
ஆ:பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்
பெ:ஆசை கூடாது மண மாலை தந்து ... ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
ஆ:பேசக்கூடாது வெரும் பேச்சில் சுகம் ... ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே
ஆ/பெ:லலல .....
பாடலை கேட்க
powered by ODEO
0 comments: