Advertisement
தென்றல் வந்து
(இளையராஜா & எஸ்.ஜானகி)
(அவதாரம்)
ஆ:தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக் கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை
பெ:எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
ஆ:எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
பெ:ஓடை நீரோடை இந்த உலகம் அது போலை
ஆ:ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போலை
பெ:நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே
ஆ:தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை
ஆ:ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
பெ:ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது
ஆ:குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா
பெ:கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா
ஆ:கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்
பெ:தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை
ஆ:திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை
பெ:வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
ஆ:எண்ணங்களுக் கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெ:உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
ஆ:தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலை
பெ:திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பிலை
பாடலாசிரியர் : வாலி(1995)
பாடலை கேட்க
powered by ODEO
0 comments: